Appusami and Seethapatti'பாக்கியம்' ராமசாமி உருவாக்கிய அப்புசாமி 1980-களில் வாசகர்களுக்கு மிகப்பிரியமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தமிழ் ‘டாம் & ஜெர்ரி' வகை நகைச்சுவை தான். எப்போது பார்த்தாலும் சீதா பாட்டியிடம் திட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் அப்புசாமி தாத்தா, அவரது துணைவர்களான ரசகுண்டு, பீமாராவ் என எப்போதும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத கும்பல் இது. பல நாவல்களிலும், தொடர்களிலும் கடந்த தலைமுறை வாசகர்களை மகிழ்வித்த அப்புசாமி தாத்தாவும், சீதாப்பாட்டியும் தற்போது புத்தகங்கள் வாயிலாகவும், நகைச்சுவை டி.வி.டி-களிலும், இணையத்தில் ‘http://www.appusami.com' என்ற முகவரியிலும் இந்த தலைமுறை வாசகர்களை தங்கள் பக்கம் கவர முயற்சித்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இருந்து படித்த தொடர் / நாவல் - ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இதை நான் Amazon Kindle-க்கு ஏற்ப மின் புத்தகமாக உருமாற்றியுள்ளேன்.

மின்னல் மழை மோகினிஉடல் பொருள் ஆனந்தி’ படித்ததிலிருந்து ஜாவர் சீதாராமனின் ரசிகனாக மாறிய பின்பு படித்த நாவல் தான் ‘மின்னல் மழை மோகினி’. இதுவும் ‘உ.பொ.ஆ’ போலவே supernatural thriller-ஆக இருக்கும் என்ற நினைப்பில் வாங்கினேன். இதிலும் ஆரம்பம் ‘A' class... 'matter இல்லேங்க... தரமானதுன்னு சொன்னேன்’. அதே இடி, மின்னல், மழை பின்னணியில் நமது கதாநாயகி மோகினி அறிமுகம் ஆகிறாள் - குழந்தையாக. ஆனால் அவள் பேய் இல்லை. வாழ்க்கையில் அதீத அழகே ஆபத்தாக மாற, தகுந்த உறைவிடம் தேடி அலையும் அபலையாக வருகிறாள். படித்து முடித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்து அசைபோடுகையில் - ’இது ஒரு அபலை பெண் குழந்தை தனது நல்ல மனதுக்காக ஒரு நல்ல வாழ்க்கை அமையப்பெறும் பயணம்’ என்பதை சாராம்சமாக உணரமுடிகிறது. ஏனோ.. இந்த புத்தகத்தை ஆமை வேகத்தில் படித்தேன். முதல் 150 பக்கங்களை படிக்க பல மாதங்கள் ஆனது. ஆனால் மீதி 300 பக்கங்களை கடந்த வாரம் சேலம் - பெங்களூரு பயணத்தில் கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களிலேயே கடந்துவிட்டேன்.

47 நாட்கள்சிவசங்கரி எழுதிய இந்த நாவல் ஒரு நல்ல ’Tearjerker' வகையில் சேர்த்தலாம். கிராமத்தில் பிறந்து வளர்ந்த விசாலிக்கு அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையான குமாருடன் திருமணம் நடக்கிறது. தனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று உணரும் முன்பு விசாலியின் வாழ்க்கையில் சூறாவளி அடித்து அவளை தூரதேசத்தில் நிராதரவாக விடுகிறது. அந்த நரகத்திலிருந்து படிப்பறிவே இல்லாத விசாலி எப்படி தப்பிக்கிறாள் என்பதே இதன் சாரம். ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம் விசாலிக்கு 47-ஏ நாட்களில் முடிந்துவிடுவதை படிப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக எழுதியிருந்தார் சிவசங்கரி. நாவலின் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இது விசாலியின் பார்வையிலே எழுதப்பட்டிருந்தாலும், நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதன் மூலம் melodrama-வை குறைத்து விறுவிறுப்பாக கொண்டுபோயிருப்பது தான். சமயத்தில் பெண் எழுத்தாளரின் வாடை அடித்தாலும், இந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு page turner வகையில் சேர்க்கலாம்.

இதற்கு பெயரும் கொலைசமீபத்தில் அடுத்தடுத்து படித்த சுஜாதாவின் நாவல் இது. வழக்கம் போல சுஜாதா ஒரு கொலைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். வழக்கம் போல கணேஷும், வசந்தும் வருகிறார்கள் என்ற போதும் இம்முறை பாத்திரப்படைப்பில் கொஞ்சம் வித்தியாசம். உதாரணம் - வசந்த் அடிக்கடி பேசும் தே*** பையா மற்றும் இதர கெட்ட வார்த்தைகள். கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான். வேறு எந்த நாவலிலாவது கணேஷ் கல்யாணம் ஆனதாக வந்ததா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மற்றபடி வழக்கில் இறங்கியதும் துப்பறியும் அந்த வேகம் வழக்கமான துறுதுறுப்பு.

ஆதலினால் காதல் செய்வீர்மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் penultimate என்று சொல்லக்கூடிய அந்த முக்கிய உச்சக்கட்டங்கள் இந்த ஐந்தாவது பாகத்தில் தான் நடைபெறுகின்றன. நான்கு புத்தகங்களில் வந்த சம்பவங்கள் எல்லாம் இந்த பாகத்தில் வந்து ஒரு புள்ளியில் குவிந்து முழுமை அடைகிறது. கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றபோதும், அவர்களின் நடத்தைகளுக்கு காரணம் கற்பிப்பதாக இந்த பாகம் முடிகிறது. என்ன தான் கற்பனை கதை என்று சொன்னாலும், வரலாற்றை மாற்றுவதாக எழுத முடியாதே. இந்த ஐந்தாம் பாகத்தில் என்ன நடக்கிறது?

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் நான்காவது பாகம் முடித்து இரண்டு வாரங்கள் ஆனபோதும் இதை பற்றி எழுத சமயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு நேற்று ஐந்தாவது பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். நான்காவது பாகத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோருக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லாதது தான். மாறாக மற்ற துணைப் பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அநிருத்த பிரம்மராயர், ஊமை ராணி ஆகியோரின் பங்கே அதிகம். மேலும் ஒரு புதிய பெண் கதாபாத்திரம் - மணிமேகலை இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தில் சம்பவங்கள் அதிகமென்றால், நான்காவது பாகத்தில் சதிவேலைகளும், சூழ்ச்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகையால் சிற்சில தொய்வுகள் இருந்தபோதும் நான்காவது பாகம் நன்றாகவே நகர்கிறது.

Ponniyin Selvanஒரு நெடிய பயணத்துக்கு கிளம்பும் ரயில் வண்டி ஆரம்பத்தில் மெதுவாக கிளம்பி, தண்டவாளத்தில் பழகிய பிறகு, இனி பயணமே முக்கியம் என்று வேகம் பிடிப்பது போல பொன்னியின் செல்வனின் முதல் இரண்டு பகுதிகளில் கதையின் சம்பவங்களை விட சூழலையும், பின்புலத்தையும் அதிகம் அலசிய பின்பு மூன்றாவது பாகத்தில் கதை வேகம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களை விட இதில் தான் சம்பவங்கள் அதிகம். அதனால் கதை விறுவிறுப்பு கூடியுள்ளது போல தோன்றுகிறது. 1 வாரத்தில் மொத்த புத்தகத்தையும் (3வது பாகத்தை) படித்த எனக்கே சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கும்போது சில காட்சிகள் விட்டுப்போகும்போது, இதனை வருடக்கணக்கில் தொடராக படித்த வாசகர்களின் நினைவு சக்தியை பாராட்ட தோன்றுகிறது. எனினும் இந்த பதிவில் மூன்றாம் பாகத்தின் கதையை சுருக்கமாக summarise செய்ய முயற்சிக்கிறேன்.

Ponniyin Selvan - 2கடந்த வார இறுதியில் பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகத்தை வெற்றிகரமாக படித்து முடித்ததும் இவ்வளவு சீக்கிரமாகவா என்று தோன்றியது? பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் படிப்பது ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' பார்ப்பதற்கு சமம். படிக்கும் நாமும் அந்த இயற்கையில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது. கோடிக்கரையின் மணல்வெளிகளும், கடலின் நுரையலைகளும், மரங்களும், புதர்களும் நம் மீது உரசுவது போன்ற effect - ஐ உணரலாம். இம்முறை கதை 10௦% தமிழக கடற்கரையிலும், 30% தஞ்சை அரண்மனையிலும், மீதி 60௦% இலங்கை காடுகளிலும் நடக்கிறது. அதனால் இந்த பாகத்தில் இயற்கையின் பங்கை வாசகர்கள் உணரலாம். மேலும் இந்த பாகத்தில் தமிழ் அரசர்கள் இலங்கை அரசியலின் மீது ஏற்படுத்திய பாதிப்பையும், தமிழ் வரலாற்றுடனான நெருக்கத்தையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் கல்கி.

Ponniyin Selvanகடந்த சில வாரங்களில் அடுத்தடுத்த தஞ்சை பயணங்கள், அதுவும் அந்த இடங்களோடு நெருக்கமாக இருசக்கர வாகன பயணம்..... அதை தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே “பொன்னியின் செல்வன்” படிக்க ஆரம்பித்துவிட்டதால் திடீரென்று தஞ்சையோடு ஒருவித பூர்வீக பந்தம் இருப்பது போல ஒரு உணர்வு. குறிப்பாக இம்முறை “பொன்னியின் செல்வன்” படிக்கும்போது (கடந்த முறையைவிட) இன்னும் அதிக பரிச்சயம் தோன்றியது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அதில் திருவையார் குறித்த வர்ணனைகள் வரும்போது உண்மையாகவே திருவாரூர் சாலைகள் நினைவுக்கு வந்தன. நான் என்ன சொல்லவருகிறேன் என்பது “பொன்னியின் செல்வன்” படிக்கும் / படித்தவர்களுக்கு புரியும்.

Are you afraid of dark?I came to know much later that this was the last novel of Sudney Sheldon before his demise. 'AYAOF' starts of well with four different murders leaving the protagonists devasted. All the murders seam to have a common thread pointing towards the organisation the victims worked for - KIG. Two widows of the victims - Kelly Mark and Diane Stevens have their path crossed accidentally but find themselves as target in the prowling claws of the murderer. Till the halfway, SS manages to hold your attention well but this time Sheldon doesn't bother to maintain the suspense. Instead he lays the thread of the whodunit yarn bare and later the novel turns to be on run. Then the novel becomes so predictable and unintentionally funny with the so called powerful 'villians' reducing themselves to a comedy stock. After a while the 'run' of Diane & Kelly becomes stale. At this point it reminds you a lot of SS's other novels - "If Tommorrow Comes", "The sky is falling" etc. However the saving grace of this novel is that it tried to get into the emotional domain of the widows and it works except for Ms. Reynold's episode. It might have been good if SS's other novels were not read but defintely not a worthy swan song for Sidney Sheldom. - {oshits} reads.

DisclosureI know that I had catched up with Michael Chrichton's "Disclosure" almost 17 years after its publishing, but it is fine that atleast I was able to read it. First I saw this as movie ofcourse of the titillation factor. Thanks to Vijayakrishnan, I read MC's "Prey" after which I discovered MC. To be frank I read 'Disclosure' only for the graphical sexual encounter, but once I passed that, after a lull, the novel picked up so fast that I found it irresistable to keep it down. 'Disclosure' says that 'Sex is all about power' in the workplace rather than a means of harassment. It gives a peek inside the corporate world, where you need to be competent player to move ahead in the corporate ladder.