Pallavan Pandyan BhaskaranShift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.

Kanthaloor Vasanthakumaran Kathaiநான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.

Madhyamarமறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.

Marmadesamகிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.

Appusami and Seethapatti'பாக்கியம்' ராமசாமி உருவாக்கிய அப்புசாமி 1980-களில் வாசகர்களுக்கு மிகப்பிரியமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்று. கிட்டத்தட்ட தமிழ் ‘டாம் & ஜெர்ரி' வகை நகைச்சுவை தான். எப்போது பார்த்தாலும் சீதா பாட்டியிடம் திட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் அப்புசாமி தாத்தா, அவரது துணைவர்களான ரசகுண்டு, பீமாராவ் என எப்போதும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத கும்பல் இது. பல நாவல்களிலும், தொடர்களிலும் கடந்த தலைமுறை வாசகர்களை மகிழ்வித்த அப்புசாமி தாத்தாவும், சீதாப்பாட்டியும் தற்போது புத்தகங்கள் வாயிலாகவும், நகைச்சுவை டி.வி.டி-களிலும், இணையத்தில் ‘http://www.appusami.com' என்ற முகவரியிலும் இந்த தலைமுறை வாசகர்களை தங்கள் பக்கம் கவர முயற்சித்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இருந்து படித்த தொடர் / நாவல் - ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும். இதை நான் Amazon Kindle-க்கு ஏற்ப மின் புத்தகமாக உருமாற்றியுள்ளேன்.

மின்னல் மழை மோகினிஉடல் பொருள் ஆனந்தி’ படித்ததிலிருந்து ஜாவர் சீதாராமனின் ரசிகனாக மாறிய பின்பு படித்த நாவல் தான் ‘மின்னல் மழை மோகினி’. இதுவும் ‘உ.பொ.ஆ’ போலவே supernatural thriller-ஆக இருக்கும் என்ற நினைப்பில் வாங்கினேன். இதிலும் ஆரம்பம் ‘A' class... 'matter இல்லேங்க... தரமானதுன்னு சொன்னேன்’. அதே இடி, மின்னல், மழை பின்னணியில் நமது கதாநாயகி மோகினி அறிமுகம் ஆகிறாள் - குழந்தையாக. ஆனால் அவள் பேய் இல்லை. வாழ்க்கையில் அதீத அழகே ஆபத்தாக மாற, தகுந்த உறைவிடம் தேடி அலையும் அபலையாக வருகிறாள். படித்து முடித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்து அசைபோடுகையில் - ’இது ஒரு அபலை பெண் குழந்தை தனது நல்ல மனதுக்காக ஒரு நல்ல வாழ்க்கை அமையப்பெறும் பயணம்’ என்பதை சாராம்சமாக உணரமுடிகிறது. ஏனோ.. இந்த புத்தகத்தை ஆமை வேகத்தில் படித்தேன். முதல் 150 பக்கங்களை படிக்க பல மாதங்கள் ஆனது. ஆனால் மீதி 300 பக்கங்களை கடந்த வாரம் சேலம் - பெங்களூரு பயணத்தில் கிட்டத்தட்ட 2-3 மணி நேரங்களிலேயே கடந்துவிட்டேன்.

47 நாட்கள்சிவசங்கரி எழுதிய இந்த நாவல் ஒரு நல்ல ’Tearjerker' வகையில் சேர்த்தலாம். கிராமத்தில் பிறந்து வளர்ந்த விசாலிக்கு அதிர்ஷ்டம் பிய்த்துக்கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையான குமாருடன் திருமணம் நடக்கிறது. தனக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று உணரும் முன்பு விசாலியின் வாழ்க்கையில் சூறாவளி அடித்து அவளை தூரதேசத்தில் நிராதரவாக விடுகிறது. அந்த நரகத்திலிருந்து படிப்பறிவே இல்லாத விசாலி எப்படி தப்பிக்கிறாள் என்பதே இதன் சாரம். ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம் விசாலிக்கு 47-ஏ நாட்களில் முடிந்துவிடுவதை படிப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியூட்டும் விதமாக எழுதியிருந்தார் சிவசங்கரி. நாவலின் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் இது விசாலியின் பார்வையிலே எழுதப்பட்டிருந்தாலும், நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதன் மூலம் melodrama-வை குறைத்து விறுவிறுப்பாக கொண்டுபோயிருப்பது தான். சமயத்தில் பெண் எழுத்தாளரின் வாடை அடித்தாலும், இந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு page turner வகையில் சேர்க்கலாம்.

இதற்கு பெயரும் கொலைசமீபத்தில் அடுத்தடுத்து படித்த சுஜாதாவின் நாவல் இது. வழக்கம் போல சுஜாதா ஒரு கொலைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். வழக்கம் போல கணேஷும், வசந்தும் வருகிறார்கள் என்ற போதும் இம்முறை பாத்திரப்படைப்பில் கொஞ்சம் வித்தியாசம். உதாரணம் - வசந்த் அடிக்கடி பேசும் தே*** பையா மற்றும் இதர கெட்ட வார்த்தைகள். கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான். வேறு எந்த நாவலிலாவது கணேஷ் கல்யாணம் ஆனதாக வந்ததா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மற்றபடி வழக்கில் இறங்கியதும் துப்பறியும் அந்த வேகம் வழக்கமான துறுதுறுப்பு.

ஆதலினால் காதல் செய்வீர்மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் penultimate என்று சொல்லக்கூடிய அந்த முக்கிய உச்சக்கட்டங்கள் இந்த ஐந்தாவது பாகத்தில் தான் நடைபெறுகின்றன. நான்கு புத்தகங்களில் வந்த சம்பவங்கள் எல்லாம் இந்த பாகத்தில் வந்து ஒரு புள்ளியில் குவிந்து முழுமை அடைகிறது. கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றபோதும், அவர்களின் நடத்தைகளுக்கு காரணம் கற்பிப்பதாக இந்த பாகம் முடிகிறது. என்ன தான் கற்பனை கதை என்று சொன்னாலும், வரலாற்றை மாற்றுவதாக எழுத முடியாதே. இந்த ஐந்தாம் பாகத்தில் என்ன நடக்கிறது?

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனின் நான்காவது பாகம் முடித்து இரண்டு வாரங்கள் ஆனபோதும் இதை பற்றி எழுத சமயம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு நேற்று ஐந்தாவது பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். நான்காவது பாகத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் முக்கிய கதாபாத்திரங்களான அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், குந்தவை ஆகியோருக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லாதது தான். மாறாக மற்ற துணைப் பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், அநிருத்த பிரம்மராயர், ஊமை ராணி ஆகியோரின் பங்கே அதிகம். மேலும் ஒரு புதிய பெண் கதாபாத்திரம் - மணிமேகலை இதில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகத்தில் சம்பவங்கள் அதிகமென்றால், நான்காவது பாகத்தில் சதிவேலைகளும், சூழ்ச்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகையால் சிற்சில தொய்வுகள் இருந்தபோதும் நான்காவது பாகம் நன்றாகவே நகர்கிறது.

Ponniyin Selvanஒரு நெடிய பயணத்துக்கு கிளம்பும் ரயில் வண்டி ஆரம்பத்தில் மெதுவாக கிளம்பி, தண்டவாளத்தில் பழகிய பிறகு, இனி பயணமே முக்கியம் என்று வேகம் பிடிப்பது போல பொன்னியின் செல்வனின் முதல் இரண்டு பகுதிகளில் கதையின் சம்பவங்களை விட சூழலையும், பின்புலத்தையும் அதிகம் அலசிய பின்பு மூன்றாவது பாகத்தில் கதை வேகம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களை விட இதில் தான் சம்பவங்கள் அதிகம். அதனால் கதை விறுவிறுப்பு கூடியுள்ளது போல தோன்றுகிறது. 1 வாரத்தில் மொத்த புத்தகத்தையும் (3வது பாகத்தை) படித்த எனக்கே சம்பவங்களை மீண்டும் யோசித்து பார்க்கும்போது சில காட்சிகள் விட்டுப்போகும்போது, இதனை வருடக்கணக்கில் தொடராக படித்த வாசகர்களின் நினைவு சக்தியை பாராட்ட தோன்றுகிறது. எனினும் இந்த பதிவில் மூன்றாம் பாகத்தின் கதையை சுருக்கமாக summarise செய்ய முயற்சிக்கிறேன்.