Parisukku Poஇது நான் படித்த 6வது ஜெயகாந்தனின் படைப்பு. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என்று அறிந்த பிறகே வாங்கினேன். மேல்நாட்டில் வாழ்ந்துவிட்டு பின் தன் தாய்நாட்டில் குடியேற விரும்பும் இசைக்கலைஞன் ஒருவன் கடைசியில் பாரீஸுக்கே போய்விடுவதாக முடிகிறது இதன் கதை. 1966-களில் எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய மேல்தட்டு சமூகத்தில் பழக்கவழக்கங்கள் ’நவீன முறை’ என்கிற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிக்கொண்டாலும், கருத்து ரீதியாக சில நூற்றாண்டுகள் பின்தங்கியே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஜெயகாந்தன். ‘பாரீஸுக்கு போ’வில் ஜெயகாந்தன் வாழ்க்கையும் கலைகளும் நவீனமுற வேண்டும், அப்படி ஆகவேண்டுமென்றால் மனதளவில் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று தன் கருத்தை நாவல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஜெயகாந்தனின் பாணியே கொஞ்சம் விஸ்தாரமாக எழுதுவது என்பதால் அவர் வார்த்தைகளை மனதளவில் படமாக விரித்து ரசிக்கவும், அவருடைய கருத்துகளை ஒத்துக்கொள்ளவும், மறுக்கவும் நிறைய வாய்ப்பளிக்கிறார்.

நான் படித்த இந்த ஜெயகாந்தனின் நான்காவது நாவல் நான் மலையாள படங்களை பார்க்க ஆரம்ப காலத்தை நினைவூட்டியது. பரபரப்பான larger than life தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை பார்த்து பழகிய எனக்கு மலையாள படங்களின் எளிமையும், இயல்பான open endings-உம் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. பின்பு மெல்ல மெல்ல இந்த உயிரோட்டமுள்ள கதையோட்டங்களுக்கு பழகிய பின்பு இந்தி படங்களும், தெலுங்கு படங்களையும் பார்ப்பது மிக கஷ்டமாக இருந்தது. (இப்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழ் என்பது வேறு விஷயம்). அதுபோல ஒரு தொடக்கம், பிரச்சினை, விவாதம் பின்பு முடிவு என்ற format-க்கு பழகிவிட்ட என் போன்ற வாசகர்களுக்கு, இந்த எளிமையான ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலின் போக்கு முதலில் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஆனால் கதையோடு ஒன்றிவிட்டு படிக்கும்போது இந்த நாவல் நம்மை ஒரு அழகான, சுற்றுப்புற சூழலாலும், மக்கள் மனதாலும் மாசுபடியாத அற்புதமான் உலகத்துக்கு கொண்டு சென்றபிறகு அந்த உலகத்தை விட்டு வரவே தோன்றாத அளவுக்கு ஐக்கியமாக முடிந்தது. படித்த பின்பு இந்த நாவலை பற்றிய விவரங்களை அறிய இணைதளத்தில் தேடியபோது தான் தெரிந்தது இது அவர் எழுதிய master piece-களில் ஒன்று என்று. Sometimes ingnorance can be a bliss.

ராமாயணத்திலே எல்லா காண்டங்களிலும் ராமரே வியாபித்து இருப்பார் ஆனால் சீதையின் பெருமையையும், அனுமனின் உயர்வையும் சொல்வது சுந்தரகாண்டம். சீதையின் துக்கங்கள் இந்த காண்டத்தில் முடிவுக்கு வருவதால் இதை சுந்தரகாண்டம் என்றும், அனுமனின் மற்றொரு பெயரான "சுந்தரன்"-ஐ ஒட்டி சுந்தரகாண்டம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சுந்தரகாண்டம்" தற்காலத்திய ராவணன்களும், அவர்களிடம் சிக்கும் சீதைகளையும் படைத்து உலாவவிட்டு, பெண்களை சுதந்திரமாக, பொருந்தா உறவுகளில் சிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறார். பலவந்தமாக நவீன ராவணனிடம் திருமண பந்ததில் சிக்கும் சீதை எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறாள் என சுவாரசியமாக கொண்டுபோயிருக்கிறார். அட்டையை பார்க்காமல் படித்தால் லட்சுமி / ரமணிசந்திரன் எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

நான் படித்த ஜெயகாந்தனின் இரண்டாவது நாவல். ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான & அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த மனோ பலாத்காரத்தை ஏற்றுக்கொள்வதையும், அதனால் சுயத்தை இழப்பதையும், அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத சமயத்தில் காதலே தன்னை அழித்துக்கொள்வதையும் மிக நிதானமாக, அதே சமயம் நறுக்கு தெரித்தது போல எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி தான் போய்கொண்டு இருக்கிறது. இந்த கொடுமையை அகற்ற முயலுவதைவிட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதே விவேகம். இதை படிக்கும் பொறுமை இருந்தால் இந்த இளம் சமுதாயம் நிறைய விவாகரத்துகளை தவிர்க்கும்.

{mosimage}'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.