RIP - தமிழ்நாடு
கடந்த மாதம் தமிழகமே தன்னெழுச்சியாக தலைமை இல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக போராடிக்கொண்டிருந்த வேளையில் நான் எனது client side business partner- ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரிடம் இந்த போராட்டத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அது 4வது நாள். அவரிடம் மாணவர்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்த வேளையில் காவல் துறை மெரீனா கடற்கறையில் மின்விளக்குகளை அணைத்துவிட்டதையும், அதற்கு பதிலாக மாணவர்கள் தங்கள் மொபைல் அலைபேசிகளில் உள்ள டார்ச்சை கொண்டு வெளிச்சமூட்டிய காட்சியை பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது எனக்கு மயிர்கூச்செரிந்தது. அவரிடம் 7ம் நாள் முடிவில் காவல்துறை வன்முறையை கொண்டு அந்த போராட்டத்தை ஒடுக்கியதை சொன்னபோது - I feel sorry for those people என்று சொன்னார்.