Letting it go...
அது எனது பொறியியல் கல்லூரியின் கடைசி காலம்.. அப்போது ஒரு நண்பன் மீது உயிராக இருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அவனும் நானும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். அவன் வேறொரு நண்பனோடு நெருக்கமாக, அவர்களை ஒன்றாக தினமும் வகுப்பில் காணவேண்டிய நிலைமை. இந்த வருடம் எப்போது முடியும் என்று தினமும் கடனேயென கழித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியில் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அது முக்கியமாக கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு. ஆனால் அன்று நிறையபேர் மட்டம் போட்டுவிட்டதால் இடத்தை நிரப்ப எங்கள் வகுப்பிலிருந்து அழைத்துப்போய் அங்கே இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவின் முடிவில் யாரேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார் அந்த பேச்சாளர்.