Being a hardcore introvert, I understand the importance of having right friends because they can change the life course of an individual. Even though the world looks down the introverts and advocates extroverts, being an introvert has some real advantages. One of them is that the people who reach to you is serious about you and the relationship cannot be frivolous. I had a just handful of friends throughout my life and everyone is a friend to remember for valid reasons and I acknowledge their valuable presence in my life on this Friendship day.

ராமாயணத்தில் ராம ராவண யுத்தம் ஆரம்பிக்கிறது. மகன் இந்திரஜித் இறந்துவிட, ராவணன் ராமனுடன் நேருக்குநேர் யுத்தத்திற்கு போக அன்று ராமன் ராவணனின் மகுடத்தை வீழ்த்தி, அவன் வில்லை உடைத்து, ரதத்தை உடைத்து தரையில் நிராயுதபாணியாக நிறுத்துகிறார். "நீ மிகவும் களைத்திருக்கிறாய். இன்று போய் நாளை வா" என்று ராமன் கூற, ராவணன் அவமானத்தால் கூணிக்குறுகி நிற்கிறான். அப்போது கம்பர் எழுதுகிறார் - "கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்". கடன் பட்டவர் படும் கலக்கம் என்பது உடமைகளை, உற்றார் உறவினர்களை எல்லாம் இழந்து நிற்கும் தனிமையை போன்றது. அது மூவுலகையும் ஆளும் மன்னாதி மன்னர்களும் படும் கலக்கம் போன்றதை சாமானியர்களும் அனுபவிக்கும் கொடுமையை விளக்க இந்த உவமையை விட ஆழமானது வேறு எதுவும் இல்லை.

24 - படத்தில் வருவது போல நமக்கு காலத்தில் பின்னோக்கி செல்லும் கடிகாரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்த தவறுகளை சரிசெய்துவிட்டு நல்லபடியாக வாழலாம். எனக்கு அப்படி ஒரு கடிகாரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு போவேன்? எனது 10ம் வகுப்பு முடிந்த தருணத்துக்கு போவேன். நான் செய்த மிகப்பெரிய தவறு 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றது தான். பத்தாம் வகுப்பில் நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்திருந்தேன். ஒருவேளை அதே பள்ளியில் படித்திருந்தால் என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து நன்றாக படித்திருப்பேனோ என்னவோ? ஆனால் புதிய பள்ளியில் நான் போனபோது தனியாக இருப்பது போல உணர்ந்தேன். சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைத்த நண்பர்களுடன் என் வாழ்க்கையின் அந்த முக்கிய வருடங்களை கழித்தேன். எனது பொறுப்பின்மையுடன் கூடா நட்பும் சேர்ந்து எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

அது எனது பொறியியல் கல்லூரியின் கடைசி காலம்.. அப்போது ஒரு நண்பன் மீது உயிராக இருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அவனும் நானும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். அவன் வேறொரு நண்பனோடு நெருக்கமாக, அவர்களை ஒன்றாக தினமும் வகுப்பில் காணவேண்டிய நிலைமை. இந்த வருடம் எப்போது முடியும் என்று தினமும் கடனேயென கழித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியில் ஒரு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அது முக்கியமாக கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு. ஆனால் அன்று நிறையபேர் மட்டம் போட்டுவிட்டதால் இடத்தை நிரப்ப எங்கள் வகுப்பிலிருந்து அழைத்துப்போய் அங்கே இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவின் முடிவில் யாரேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று சொன்னார் அந்த பேச்சாளர்.

It happened once again.. another girl from my family circle had asked her parents to look for an USA based groom. Similar thing happened few years ago in my circle and unfortunately that girl is still waiting for a groom now... from anywhere. Everyone has a right to have expectations about their life partner but I feel that having this US as a priority in choosing a life partner is a wrong criteria. I can't understand why still in 2016 people think "USA" is some heaven and fall for the grooms there. If the girls feel that USA is a dream destination for them, why can't they try to reach there by their own efforts - either via studies or get a project based there. Instead why select a guy based there just to reach USA? Is the groom supposed to be a "immigration personnel" or a life partner who should stand together in all the phases of life?

நமது வாழ்க்கையில் எவ்வளவோ மனிதர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் அவர்கள் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தனது முத்திரையை பதித்துவிட்டு போயிருப்பார்கள். பின்னோக்கி திரும்பி பார்க்கும்போது "ஒருவேளை இவர்கள் இல்லையென்றால்.." என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கும். இது போன்ற மனிதர்களை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு - எங்கிருந்தோ வந்தான் - போட்டிருக்கிறேன். இந்த பதிவும் அதன் தொடர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.

நமக்கு எங்கேயும் எப்போதும் ஞானம் /பதில்கள் கிடைக்கலாம் ஆகையால் நமது சூழ்நிலையில் இருப்பது அவசியம். பல முறை நாம் உடலளவில் ஒரு இடத்தில் இருப்போம் ஆனால் நம் மனதளவில் வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருப்போம். நாம் எங்கே பறந்துக்கொண்டிருந்தாலும் நம்மை பிடித்து தரைக்கு இழுத்து grounded-ஆக வைக்க ஒரு mechanism அவசியம்.  எனக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பயங்கர விரக்தி அடைந்த நிலையில் இருந்தபோது நடந்த ஒரு பயணம் என்னை மீண்டும் புதுப்பிக்க வைத்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி  தலைவர்களின் பிரச்சார தரம் குறைந்துக்கொண்டே வருவதை பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்  ஒட்டு கேட்பதை விட்டுவிட்டு எதிர் தரப்பை கேவலமாக பேசி "இவருக்கா உங்கள் ஒட்டு?" என்று கேட்பதிலிருந்தே இவர்களது பதவி ஆசை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் இரண்டு தரப்பின் தாக்குதல் வீடியோக்கள் ஒன்றுபோலவே உள்ளன. இருவருமே ஊழல் பெருச்சாளிகள், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்ள வாக்கு இல்லதவர்கள். அதனாலேயே ஒருவர் மற்றவரை திட்டிக்கொள்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே எனக்கு நான் இருக்கும் இந்த ஐ.டி  துறையின் மீது ஒரு அவநம்பிக்கையும், பாதுகாப்பின்மையும் தோன்ற துவங்கியது. மற்ற துறைகளில் அனுபவம் கூட கூட பொறுப்புகளும் மரியாதையும் கிடைக்கும். ஆனால் இந்த தொழில் நுட்பத்துறையில் அனுபவமும் சம்பளமும் கூட கூட பாதுகாப்பின்மையும், அரசியலும் தான் கூடும். பணத்தை மிச்சப்படுத்த இந்த தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் சம்பளம் அதிகம் வாங்கும் பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அடிமாட்டு சம்பளத்தில் அனுபவம் குறைந்த இளைய பணியாளர்களை நியமிக்கும். அதற்கு நிறுவனங்கள் கையில் எடுப்பது அப்ரைசல் எனப்படும் மதிப்பீட்டை தான். அதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள மேனேஜர்களை அண்டிப்பிழைக்கும் அரசியல் பண்ண ஊழியர்கள் பழக்கப்படுகிறார்கள். இங்கு உழைப்புக்கு மதிப்பில்லை. மாறாக  எவ்வளவு நக்குகிறீர்களோ அதற்கேற்ப தான் உங்கள் மதிப்பெண். இதற்கு இந்த மேனேஜர்கள் கொடுக்கும் பெயர் "கம்யூனிக்கேஷன் ஸ்கில்".