Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Click the image to read furtherஹிந்து மதத்தை காப்பாற்ற என்றே கூடியிருக்கிறோம் என்று ஒரு அமைப்பு வலைமனை ஒன்றை துவக்கி அதில் நித்தியானந்தனை இனி என்ன செய்யவேண்டும் என்று 3 பகுதி பதிவு ஒன்றை போட்டிருந்தார்கள். அதன் நோக்கம் அப்பட்டமாக தெரிந்தது - அந்த போலி சாமியாரை காப்பாற்ற வேண்டும். அவன் செய்ததை முழுவதுமாக மறைத்துவிட்டு இது என்னவோ ஹிந்து மதத்தை ஒழிக்க வாடிகனின் ரூ. 200 கோடி சதி என்றும், இதில் சன் டிவி பங்கு பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே ரஞ்சிதாவை ஏவி வீடியோ எடுத்து அவனுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது என்று பேத்தியிருந்தார்கள். படித்ததும் சிரிப்போடு சேர்ந்து எரிச்சலும் வந்தது. தே*** பசங்க...! நித்தியானந்தனோட கைக்கூலிகளாக காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் ஜாதி என்று தெரிந்தது.


நித்தியானந்தன் தலைமறைவாக இருந்துக்கொண்டு கொடுத்த பேட்டியில் “சட்டரீதியாக நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று தான் சொல்லியிருந்தானே தவிர “நான் தவறே செய்யவில்லை ” என்று சொல்லவில்லை. வயது வந்த இருவர் சம்மதத்தோடு கொள்ளும் உடலுறவு சட்டரீதியாக தவறே அல்ல என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிய பிறகு இவன் சொல்வதின் அர்த்தம் புரியவில்லையா? பின்னர் ரொம்ப பெருந்தன்மையோடு “அந்த வீடியோவில் இருந்தது நான் தான். ஆனால் அதன் பல பகுதிகள் தவறாக் அர்த்தம் கற்பிக்கப் பட்டது மற்றும் கம்ப்யூட்டரில் கிராஃபிக்ஸ் மூலம் morphing செய்யப்பட்டது” என்று பேட்டி கொடுத்தான். ஏண்டா எல்லா கருமத்துக்கும் கம்ப்யூட்டர் தான் கிடைத்ததா? நயன்தாரா சிம்புவுக்கு நாக்கு போட்டாலும் “கிராஃபிக்ஸ்”... ரியா சென் அஷ்மித் படேலுக்கு “புண்... யை” காட்டினாலும் கிராஃபிக்ஸ், கரீனா கபூர் ஷாகித் கபூரை கிஸ்ஸடித்தாலும் கிராஃபிக்ஸ்... எதுக்கு தான் கிராஃபிக்ஸ் செய்யரதுன்னு விவஸ்தையே இல்லையா என்ன? நம்ம ஊரிலே கிராஃபிக்ஸ் அவ்வளவு சீப்பா செய்யுறாங்களா? இது தெரியாமலா ஹாலிவுட்-ல இன்னும் கோடிகோடியா செலவு பண்ணி கிராஃபிக்ஸ் பண்ணிகிட்டு இருக்காங்க? ரஞ்சிதாவும் ‘நான் சுவாமிக்கு பணிவிடை செய்ததை வீடியோ எடுத்து தவறாக அர்த்தம் கற்பிக்கிறார்கள்” என்று சொல்லியிருந்தாள். தனியறையில் படுத்துக்கிட்டு ஜட்டிக்கு மேலே வேட்டியை தூக்கிக்கொண்டும், கட்டியணைத்தும் முத்தமிட்டுக்கொண்டும் என்ன பணிவிடையோ?

அந்த வலைமனையில் “அந்த விவகாரமான வீடியோவில் தோன்றும் தமிழ் நடிகை ரஞ்சிதா அவருடன் தாந்திரீக சாதனைகளைப் பயின்றுகொண்டிருந்திருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன். உடல்-நெருக்கத்திற்கு முன்பு தன்னடகத்திற்கான சில பயிற்சிகளையும் அவர் ரஞ்சிதாவுக்குக் கற்பித்திருக்கலாம்.... வீடியோவில் வரும் தருணத்தில், நித்யானந்தா முழுமையாக விழிப்பு நிலையில் இல்லாதபோது, ரஞ்சிதா பாலுணர்வு விழைவுக்கான முயற்சிகளைத் தொடங்குகிறார்; ஆனால் அது உடலுறவு வரை செல்லவில்லை. ....மேலும், தொலைக்காட்சியில் காட்டப் பட்ட வீடியோக்கள் உண்மையில் நடந்த விஷயங்களை திரித்து உருமாற்றப் பட்டவை என்றும் வேண்டுமென்றே நிலைமையை மிகைப் படுத்திக் காண்பிப்பவை என்றும் ரஞ்சிதா கூறுகிறார். நித்யானந்தா ரஞ்சிதாவை நிறுத்துமாறு கூறித் தடுக்கும் பகுதிகள் காண்பிக்கப் படவில்லை.”

எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் மேலே சொல்லப்பட்ட பகுதிகளில் எழுதியவனின் நோக்கம் என்ன என்று அப்பட்டமாக தெரிந்திருக்கும். ஹிந்து மதத்தை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு ஒரு குற்றத்தை “தாந்த்ரீக பயிற்சி” என்றெல்லாம் சொல்லி மழுப்ப முயற்சிப்பதன் மூலம் இந்த அமைப்பே ஹிந்து மதத்தை அசிங்கப்படுத்தவும், அழிக்கவும் முயற்சி செய்து வருகிறது. நித்தியானந்தன் ரஞ்சிதாவை ஓ***தை அப்பட்டமாக வெளிச்சத்தில் எடுத்திருந்தாலும் “சாமியார் மனித ஊசியால் ரஞ்சிதாவுக்கு அக்குபங்சர் செய்து நோயை குணமாக்குகிறார்” என்று சப்பைகட்டு கட்டும் இந்த மாமா பையல்கள் கும்பல். இவர்களுக்கு பணரீதியாக லாபம் கிடைக்கும் என்றால் அம்மா, மனைவி, சகோதரிகளை கூட நித்தியானந்தனிடம் “தாந்த்ரீக சாதனைகளை” படிக்க அனுப்பி வைக்கலாம்.

அப்புறம்... சாமியார் உடலுறவு கொள்ளகூடாதுன்னு எந்த சட்டத்துல சொல்லியிருக்குன்னு கேட்டுகுட்டு இன்னொரு மாமா கும்பல் கிளம்பி இருக்கு. மூதேவி.. நீ கல்யாணம் பண்ணிகிட்டு நடு ரோட்டுல கூட உன் பொண்டாட்டியோட படு... எவன் கண்டுக்கப்போறான்? அதை விட்டுட்டு பிரம்மச்சரியம், துறவரம்னு பொய் சொல்லிகிட்டு சைடுல இது போல தே*** கூட ஏன் படுக்கனும்? இன்னொரு கொடுமை இந்த கஸ்மாலத்தை விஸ்வாமித்திர கூட ஒப்பிட்டு .. இது யோக பிருஷ்டம், அதுக்கு பரிகாரம் பண்ணிக்கலாம்-னு ஒரு நாதாரி எழுதியிருந்தான். விஸ்வாமித்திரர் ஊரறிய கல்யாணம் பண்ணி சகுந்தலையை பெற்றுக்கொண்டார். இவனை மாதிரி இருட்டுல ஒதுங்கலை. சும்மா ஒரு 4 புராண கதைகளை மனப்பாடம் பண்ணிக்கிட்டு, பழைய சாமியார்களோட லெக்சர்களை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கொண்டு கொஞ்சம் நல்ல பேச்சாற்றலோட இருந்தால் இவனை போல நான் கூட ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம் போல. என் பையனுக்கு career options-ல “ஆசிரமம் ஆரம்பித்தல்” என்பதை ஒன்றாக வைத்திருக்கிறேன். காசுக்கு காசு, குட்டிகளுக்கு குட்டி... செம ஜாலி.

இவனுங்களை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. சாமிக்கும் நமக்கும் நடுவே புரோக்கர் எதற்கு என்று மக்கள் யோசித்தாலே போதுமே இது போன்ற போலி சாமியார்களின் தொழிலை முடக்க. சினிமா போல இந்த சாமியார் தொழிலுக்கும் இருக்கும் மவுசு குறையவே குறையாது போல. காஞ்சிபுரத்தில் இருக்கும் புரோக்கர் கும்பலை பற்றி சில வருடங்களுக்கு முன்னாடி நாறடித்த போதும் இன்னும் மக்கள் அந்த ‘பெரியவாள்”களிடம் போய் காலில் விழுந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வீடியோவில் கூடப்படுத்த சொர்ண நடிகையை பற்றி கொஞ்ச நாள் பேசினார்கள்... ஆனால் சாமியாருக்கு மவுசு குறைந்ததாக தெரியவில்லை. அந்த கும்பல் மனித சமுதாயத்துக்கோ, மதத்துக்கோ என்ன செய்கிறது? மாறாக அரசியல் மேலிடத்துக்கும், தொழிலதிபர்களுக்கும் புரோக்கர் வேலை செய்துக்கொண்டு இருக்கிறது. இது அல்லவோ துறவரம்? நித்தியானந்தன் சாமியார்னு சொல்லிகிட்டு மாமிகளோட (aunty) ஜல்ஸா பண்ணலாம் தப்பில்லை.. ஆனால் அதை மீடியாக்கள் வெளியே கொண்டு வந்தால் “ஹிந்து துவேஷ மீடியாக்கள், வாடிகனின் கைக்கூலிகள்” என்று சால்ஜாப்பு சொல்லி சாமியாரிடம் எச்சில் காசு பொறுக்கும் கும்பல்கள் கோலாகலமாக வாழலாம்.

ஹிந்து மதம் பல்லாயிரக்கணக்கான வருடங்களை தாண்டி, பல மாற்றங்களை உள்ளடக்கி வந்தது. இதை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது. அதனால் மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு நித்தியானந்தன், காஞ்சி கும்பல் செய்யும் அழிச்சாட்டியத்தை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனிதனுக்கு மதம் எதற்கு என்பது என் வாதம். நாம் இருக்கும் வரை நல்ல மனிதர்களாக, மற்றவர்களை கஷ்டப்படுத்தாமலேயே வாழ்ந்தால் போதாதா? இருந்தாலும் நம் மக்கள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை.

காஞ்சிபுரம் தேவநாதன் மீண்டும் கோவில் பூசாரி ஆகி கொஞ்ச நாளில் கோவில் கர்ப்பகிருகத்தில் தன் “வேலையை” ஆரம்பிக்கலாம். நித்தியானந்தன் மீண்டும் வந்து “பூட்டை திற, பேண்ட் ஜிப்பை திற..” என்று லெக்சர் கொடுக்க ஆரம்பித்து பிரபலம் ஆகலாம்... ரஞ்சிதா ஏதாவது ஒரு டி.வி-யில் “மச்சினி..” என்ற மெகா சீரியலில் வந்து கண்ணை கசக்கி, முந்தானையில் மூக்கை சிந்தி மக்கள் மனதில் பத்தினி தெய்வமாக இடம் பிடிக்கலாம்.. புவனேஸ்வரி அக்கா போல விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட அடுத்த வருடமே அம்மனின் பக்தை வேடத்தில் நடித்து சிறந்த நடிகை விருது வாங்கியது போல ரஞ்சிதாவும் “சிறந்த நடிகை” ஆகலாம்... நம் மக்களிடையே எதுவும் நடக்கும்!!!