Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விரும்பி சொன்ன பொய்கள்சுஜாதாவின் இந்த 1987-ல் ’குங்குமச் சிமிழ்’ இதழுக்காக எழுதப்பட்ட நாவல், ஒரு புதுமையான முயற்சி. நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியுடன் மரக்குடியில் சலனமான இரவில் கடற்கரை வெளியில் passionate உடலுறவு ஏற்படுகிறது. இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது. ஆரம்பம் கொஞ்சம் மந்தமாக ஆரம்பித்தாலும் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் (உபயம்: மந்தாகினியின் உடற்கூறு பற்றிய சுஜாதாவின் வர்ணனை மற்றும் ராதாகிருஷ்ணனுடனான உடலுறவு) கதையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வதை உணரமுடிகிறது. சுஜாதாவின் பலமே இந்த பளீரென்று முகத்தில் அடிக்கும்படியான எழுத்துக்கள் தான். நிச்சயம் இதை நான் (வயதுக்கு வராத) சிறுவர்களுக்கு படிக்க கொடுக்கமாட்டேன். ஆனால் பெரியவர்கள் இந்த கதைப்போக்கை உணர்ந்து பாராட்ட முடியும். இந்த புத்தகம் ஏற்கனவே என்னோடு இருந்தபோதும் இது குறித்த அனன்யாவின் பதிவை படித்தபிறகே ஒரு குறுகுறுப்பு வந்து ஒரே மூச்சில் படித்தேன், ரசித்தேன். புத்தக விவரங்கள்:- விசா பதிப்பாளர்கள், சென்னை; 80 பக்கங்கள்; விலை: ரூ. 38/- .