24 - படத்தில் வருவது போல நமக்கு காலத்தில் பின்னோக்கி செல்லும் கடிகாரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்த தவறுகளை சரிசெய்துவிட்டு நல்லபடியாக வாழலாம். எனக்கு அப்படி ஒரு கடிகாரம் கிடைத்தால் எந்த காலத்துக்கு போவேன்? எனது 10ம் வகுப்பு முடிந்த தருணத்துக்கு போவேன். நான் செய்த மிகப்பெரிய தவறு 11-ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றது தான். பத்தாம் வகுப்பில் நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்திருந்தேன். ஒருவேளை அதே பள்ளியில் படித்திருந்தால் என் மீது வைக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து நன்றாக படித்திருப்பேனோ என்னவோ? ஆனால் புதிய பள்ளியில் நான் போனபோது தனியாக இருப்பது போல உணர்ந்தேன். சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் கிடைத்த நண்பர்களுடன் என் வாழ்க்கையின் அந்த முக்கிய வருடங்களை கழித்தேன். எனது பொறுப்பின்மையுடன் கூடா நட்பும் சேர்ந்து எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.

நமது வாழ்க்கையில் எவ்வளவோ மனிதர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் அவர்கள் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தனது முத்திரையை பதித்துவிட்டு போயிருப்பார்கள். பின்னோக்கி திரும்பி பார்க்கும்போது "ஒருவேளை இவர்கள் இல்லையென்றால்.." என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கும். இது போன்ற மனிதர்களை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு - எங்கிருந்தோ வந்தான் - போட்டிருக்கிறேன். இந்த பதிவும் அதன் தொடர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.

நமக்கு எங்கேயும் எப்போதும் ஞானம் /பதில்கள் கிடைக்கலாம் ஆகையால் நமது சூழ்நிலையில் இருப்பது அவசியம். பல முறை நாம் உடலளவில் ஒரு இடத்தில் இருப்போம் ஆனால் நம் மனதளவில் வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருப்போம். நாம் எங்கே பறந்துக்கொண்டிருந்தாலும் நம்மை பிடித்து தரைக்கு இழுத்து grounded-ஆக வைக்க ஒரு mechanism அவசியம்.  எனக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பயங்கர விரக்தி அடைந்த நிலையில் இருந்தபோது நடந்த ஒரு பயணம் என்னை மீண்டும் புதுப்பிக்க வைத்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி  தலைவர்களின் பிரச்சார தரம் குறைந்துக்கொண்டே வருவதை பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்  ஒட்டு கேட்பதை விட்டுவிட்டு எதிர் தரப்பை கேவலமாக பேசி "இவருக்கா உங்கள் ஒட்டு?" என்று கேட்பதிலிருந்தே இவர்களது பதவி ஆசை அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் இரண்டு தரப்பின் தாக்குதல் வீடியோக்கள் ஒன்றுபோலவே உள்ளன. இருவருமே ஊழல் பெருச்சாளிகள், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்ள வாக்கு இல்லதவர்கள். அதனாலேயே ஒருவர் மற்றவரை திட்டிக்கொள்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே எனக்கு நான் இருக்கும் இந்த ஐ.டி  துறையின் மீது ஒரு அவநம்பிக்கையும், பாதுகாப்பின்மையும் தோன்ற துவங்கியது. மற்ற துறைகளில் அனுபவம் கூட கூட பொறுப்புகளும் மரியாதையும் கிடைக்கும். ஆனால் இந்த தொழில் நுட்பத்துறையில் அனுபவமும் சம்பளமும் கூட கூட பாதுகாப்பின்மையும், அரசியலும் தான் கூடும். பணத்தை மிச்சப்படுத்த இந்த தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் சம்பளம் அதிகம் வாங்கும் பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அடிமாட்டு சம்பளத்தில் அனுபவம் குறைந்த இளைய பணியாளர்களை நியமிக்கும். அதற்கு நிறுவனங்கள் கையில் எடுப்பது அப்ரைசல் எனப்படும் மதிப்பீட்டை தான். அதனாலேயே தங்களை காப்பாற்றிக்கொள்ள மேனேஜர்களை அண்டிப்பிழைக்கும் அரசியல் பண்ண ஊழியர்கள் பழக்கப்படுகிறார்கள். இங்கு உழைப்புக்கு மதிப்பில்லை. மாறாக  எவ்வளவு நக்குகிறீர்களோ அதற்கேற்ப தான் உங்கள் மதிப்பெண். இதற்கு இந்த மேனேஜர்கள் கொடுக்கும் பெயர் "கம்யூனிக்கேஷன் ஸ்கில்".

எவ்வளவு நாளுக்கு தான் நான் user manual கணக்கா பதிவு போடுறது.. அவனவன் எழுத ஆரம்பிச்சு 2 வருஷத்திலே சுஜாதா கணக்கா எழுத ஆரம்பிக்கிறான் ஆனா என்னோட எழுத்து தரம் நாளுக்கு நாள் கீழே போயிட்டே இருக்குன்னு மனசாட்சி கிண்டலடிக்க... நானும் இனிமே கதை எழுதப்போறேன்னு முரசு அஞ்சல் சாப்ட்வேர் போட்டு வேர்டுபேட்-ஐ தொறந்து வச்சுகிட்டு என்ன எழுதன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

There goes an adage - Something is better than nothing. But when it comes to be with people I feel that if you don't get right people - "Nothing is better than something negative". If I paraphrase it, then it will read like this - It is better to be alone rather than being with people who are cynical or add no value to my life". Probably this finicky nature had left me with only a handful of friends all over my life. I am not complaining but happy that I am choosing people whose presence I need in my life forever.

When it comes to sex, we Indians are definitely hypocrites, atleast in admitting that we think about sex a lot of time ever since the teens. Everyone's entry into the sexual fantascy itself will be a fascinating story and most of the times those stories go to the grave with the owners. For South Indian people who belonged to 80-s like me, it is still more fascinating because of restricted / almost nil access to quality sex materials. The escapades we done to get those materials even soft core / harmless erotic stuffs can make thousands of interesting stories.

When Orkut was introduced I joined on it very late and by the time I was getting familiar of its features I switched to Facebook in late 2009 and started using it actively from 2010. If you notice my "Monthwise Archives", you could see that I was very actively blogging in 2007/2008/2009.. the blog count was on steady rise because I was using this blog as a platform for expression and I used to receive hundreds of visitors everyday. I easily covered more than a lakh visitors in an year.

கல்லூரியில் காதல்... சோதனைகள் வந்தபோதும் விடாது இணைந்து நின்று கல்யாணம் செய்த காதலர்கள்.. கணவன் தன் படிப்பை முடிக்கட்டும், அதுவரை அடுப்பெரிய நான் வேலைக்கு போகிறேன் என்று யதார்த்தத்தை உணர்ந்த துணிச்சலான காதல் மனைவி ... அவள் ஆசைப்படியே கணவனுக்கு வேலை கிடைக்கிறது. கஷ்டங்கள் எல்லாம் முடிந்தது என சென்னைக்கு சென்று தன் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று சந்தோஷத்தோடு பிறந்தநாளுக்கு ஆடை எடுக்க சென்றவர்களுக்கு விதி வேறு பரிசளிக்கிறது. அவள் கண் முன்னே அவள் காதல் கணவன் மூன்று அடியாட்களால் நடுத்தெருவில் கொல்லப்படுகிறான். இது ஏதோ சினிமா கதை அல்ல.. சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் நடந்த கொடூரம். கல்லூரியில் படிக்கையில் காதலித்து மணந்த சங்கர் - கௌசல்யா ஆகியோரின் கண்ணீர் கதை இது.